Tuesday 20 September 2016




இன்று வரலாற்றில் முக்கியமான நாள்.சொந்த நலனுக்காக தமிழகத்தை இவ்வளவு காலம் நசுக்கி கண்டுகொள்ளாமலிருந்த காங்கிரஸ்,பா.ஜ.கட்சிகளின் மூக்கை உடைத்து உச்ச நீதிமன்றத்தின் மூலமாக நமக்கு நீதி கிடைத்திருக்கிறது. நான்கு வாரத்திற்குள் மேலாண்மை வாரியத்தை உருவாக்க வேண்டிய கட்டயத்திற்கு மத்திய அரசு தள்ளப்பட்டிருக்கிறது.
அதிர்ச்சியில் உறைந்துள்ள கர்நாடகம் பழையபடி தன் அடாவடித்தனங்களைக்காட்டும். அதைக்காரணம் காட்டி மத்திய அரசு நிறைவேறாமல் எப்பொழுதும் போல் நழுவப்பார்க்கும்.
தமிழகத்தின் அனைத்துக்கட்சிகளும் டெல்லியிலேயே முகாமிட்டு காரியத்தை நிறைவேற்ற வேண்டும். அப்படி நடக்குமாத்தெரியவில்லை. காரியத்தை நிறைவேற்ற தமிழக மக்களின் முன் எப்போழுதுமில்லாத போராட்டம் நடத்த வேண்டியதன் தேவையும் உருவாகலாம்!
தேய்ந்து கொண்டிருக்கும் தமிழினம் இப்பொழுதாவது விழிக்கட்டும். நமதுரிமை நமக்கு கிடைக்கட்டும்.

No comments:

Post a Comment